Sign In
0
ஈசாப் கதைகள்
படங்கள்: பாயல்
ஒரு ஏரியில் இரண்டு நாரைகளும், ஒரு ஆமையும் வாழ்ந்து வந்தன. அவை நல்ல நண்பர்கள்.
மழை இல்லாததால் ஏரியில் நீர் குறையத் தொடங்கியது. மூவரும் வேறு இடத்திற்குச் செல்ல திட்டமிட்டன.
ஆமைக்கு பறக்க முடியாததால் ஒரு குச்சியில் வைத்து அலகால் தூக்கிச் செல்லத் திட்டமிட்டன.
மற்ற பறவைகள் அதைப் பார்த்து வியந்து பாராட்டின.
ஆமையும் பறக்கும் மகிழ்ச்சியில் யோசிக்காமல் கத்த குச்சியிலிருந்து கீழே விழுந்தது.