Sign In

அது ஒரு அடர்ந்த காடு. அங்கு பல மிருகங்கள் வாழ்ந்து வந்தன. அந்த காட்டில் நரி ஒன்று வசித்து வந்தது. அதற்கு எப்போதும் யாரையாவது ஏமாற்றி மகிழ்வதே பொழுது போக்காக இருந்தது.
அதே காட்டில் புத்திசாலி நாரை ஒன்றும் இருந்தது. அந்த நாரை அனைத்து மிருகங்களிடமும் நன்மதிப்பை பெற்று இருந்தது. இதை பொறுக்க முடியாத நயவஞ்சக நரி அந்த நாரையை எப்படியாவது ஏமாற்றத் திட்டமிட்டது.

ஒரு நாள் நாரை நரியின் குகை இருக்கும் வழியில் வந்துகொண்டிருந்தது.
நரி அந்த நாரையைப் பார்த்து “நண்பனே! உன்னுடைய அறிவைப் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். நான் நாளை உனக்கு ஒரு விருந்து வைக்க விரும்புகிறேன். உன்னால் வர முடியுமா?” என்று கேட்டது. நாரையும் கண்டிப்பாக வருகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றது.

அடுத்த நாள், நரி சுவைமிக்க பாயாசம் ஒன்றை செய்தது.
அன்று மாலை நாரை நரியின் இடத்திற்கு சென்றது. நரியோ திட்டமிட்டபடி, பாயாசத்தை அகன்ற இரு தட்டுகளில் ஊற்றி பறிமாறியது. நாரையால் வாய் அகன்ற தட்டில் உள்ள பாயாசத்தைக் குடிக்க முடியவில்லை.
நரியோ அந்த பாயாசத்தை நக்கி குடித்துவிட்டு “நண்பனே இந்த பாயாசத்தை உனக்காக செய்தேன். எப்படி இருந்தது?” என்று சிரித்துகொண்டே கேட்டது.
நாரை தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தாலும் நரியிடம், “நண்பனே! பாயாசம் மிகவும் ருசியாக இருந்தது” என்று கூறியது.
நாரை நரியிடம், “இரவு நேரம் ஆக போகிறது நான் விடை பெறுகிறேன்” என்று கூறியது.

செல்லும்முன் “இன்று நீ எனக்கு விருந்து வைத்தாய்! பதிலுக்கு நான் உனக்கு விருந்து வைக்கலாம் என்று நினைக்கிறேன். உன்னால் வர முடியுமா? என்று கேட்டது. நரியும் வர சம்மதம் தெரிவித்தது.
நரியோ நாரையை ஏமாற்றி விட்டேன் என்ற கர்வத்துடன் சந்தோசமாக உறங்க சென்றது. நாரை பசியுடனும், வருத்தத்துடனும் பறந்து சென்றது.

அடுத்த நாள் நாரை நரிக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று நினைத்தது. பல வகையான சுவைமிக்க மீன்களைப் பிடித்தது.
அன்று மாலை நரி நாரையின் வீட்டுக்கு சென்றது. நரி வந்தவுடன், நாரை அந்த மீன்களை சிறிய வாய் கொண்ட இரண்டு குவளைகளில் ஊற்றியது. அதைப் பார்த்ததும் நரிக்கு வாயில் எச்சில் ஊறியது. இன்றைக்கு நல்ல விருந்து என்று நரி நினைத்தது.

நாரை ஒரு குவளையை நரியிடம் கொடுத்து விட்டு தன் நீண்ட அலகால் குவளையில் இருந்த மீன்களைக் கொத்தி ருசித்தது. நரியினால், குவளையின் வாய் சிறியதாய் இருந்ததால் மீன்களை எட்ட முடியவில்லை.
நாரை நரியைப் பார்த்து “மீன்கள் எப்படி இருந்தது?" என்று கேட்டது. அப்போது நரி தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தது. இருந்தாலும் நரி, “மிகவும் அருமை நண்பா! இது போன்ற சுவை மிக்க மீன்களை என் வாழ்க்கையில் நான் சாப்பிட்டதே இல்லை” என்று பொய் சொல்லியது.

நரி, நாரையிடம் விருந்துக்கு நன்றி கூறிவிட்டு வருத்ததுடன் சென்றது.
அப்போது நரி தான் மற்றவர்களை ஏமாற்றும் போது அவர்கள் எவ்வாறு வருத்தப்பட்டு இருப்பார்கள் என்று உணர்ந்தது. அன்று முதல் திருந்திய நரி, பிறகு யாரையும் ஏமாற்றுவதில்லை.
✰நீதி: நீ பிறருக்குத் தீங்கு செய்தால் அதுவே உனக்கும் கிடைக்கும்.

அது ஒரு அடர்ந்த காடு. அங்கு பல மிருகங்கள் வாழ்ந்து வந்தன. அந்த காட்டில் நரி ஒன்று வசித்து வந்தது. அதற்கு எப்போதும் யாரையாவது ஏமாற்றி மகிழ்வதே பொழுது போக்காக இருந்தது.
அதே காட்டில் புத்திசாலி நாரை ஒன்றும் இருந்தது. அந்த நாரை அனைத்து மிருகங்களிடமும் நன்மதிப்பை பெற்று இருந்தது. இதை பொறுக்க முடியாத நயவஞ்சக நரி அந்த நாரையை எப்படியாவது ஏமாற்றத் திட்டமிட்டது.

ஒரு நாள் நாரை நரியின் குகை இருக்கும் வழியில் வந்துகொண்டிருந்தது.
நரி அந்த நாரையைப் பார்த்து “நண்பனே! உன்னுடைய அறிவைப் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். நான் நாளை உனக்கு ஒரு விருந்து வைக்க விரும்புகிறேன். உன்னால் வர முடியுமா?” என்று கேட்டது. நாரையும் கண்டிப்பாக வருகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றது.

அடுத்த நாள், நரி சுவைமிக்க பாயாசம் ஒன்றை செய்தது.
அன்று மாலை நாரை நரியின் இடத்திற்கு சென்றது. நரியோ திட்டமிட்டபடி, பாயாசத்தை அகன்ற இரு தட்டுகளில் ஊற்றி பறிமாறியது. நாரையால் வாய் அகன்ற தட்டில் உள்ள பாயாசத்தைக் குடிக்க முடியவில்லை.
நரியோ அந்த பாயாசத்தை நக்கி குடித்துவிட்டு “நண்பனே இந்த பாயாசத்தை உனக்காக செய்தேன். எப்படி இருந்தது?” என்று சிரித்துகொண்டே கேட்டது.
நாரை தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தாலும் நரியிடம், “நண்பனே! பாயாசம் மிகவும் ருசியாக இருந்தது” என்று கூறியது.
நாரை நரியிடம், “இரவு நேரம் ஆக போகிறது நான் விடை பெறுகிறேன்” என்று கூறியது.

செல்லும்முன் “இன்று நீ எனக்கு விருந்து வைத்தாய்! பதிலுக்கு நான் உனக்கு விருந்து வைக்கலாம் என்று நினைக்கிறேன். உன்னால் வர முடியுமா? என்று கேட்டது. நரியும் வர சம்மதம் தெரிவித்தது.
நரியோ நாரையை ஏமாற்றி விட்டேன் என்ற கர்வத்துடன் சந்தோசமாக உறங்க சென்றது. நாரை பசியுடனும், வருத்தத்துடனும் பறந்து சென்றது.

அடுத்த நாள் நாரை நரிக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று நினைத்தது. பல வகையான சுவைமிக்க மீன்களைப் பிடித்தது.
அன்று மாலை நரி நாரையின் வீட்டுக்கு சென்றது. நரி வந்தவுடன், நாரை அந்த மீன்களை சிறிய வாய் கொண்ட இரண்டு குவளைகளில் ஊற்றியது. அதைப் பார்த்ததும் நரிக்கு வாயில் எச்சில் ஊறியது. இன்றைக்கு நல்ல விருந்து என்று நரி நினைத்தது.

நாரை ஒரு குவளையை நரியிடம் கொடுத்து விட்டு தன் நீண்ட அலகால் குவளையில் இருந்த மீன்களைக் கொத்தி ருசித்தது. நரியினால், குவளையின் வாய் சிறியதாய் இருந்ததால் மீன்களை எட்ட முடியவில்லை.
நாரை நரியைப் பார்த்து “மீன்கள் எப்படி இருந்தது?" என்று கேட்டது. அப்போது நரி தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தது. இருந்தாலும் நரி, “மிகவும் அருமை நண்பா! இது போன்ற சுவை மிக்க மீன்களை என் வாழ்க்கையில் நான் சாப்பிட்டதே இல்லை” என்று பொய் சொல்லியது.

நரி, நாரையிடம் விருந்துக்கு நன்றி கூறிவிட்டு வருத்ததுடன் சென்றது.
அப்போது நரி தான் மற்றவர்களை ஏமாற்றும் போது அவர்கள் எவ்வாறு வருத்தப்பட்டு இருப்பார்கள் என்று உணர்ந்தது. அன்று முதல் திருந்திய நரி, பிறகு யாரையும் ஏமாற்றுவதில்லை.
✰நீதி: நீ பிறருக்குத் தீங்கு செய்தால் அதுவே உனக்கும் கிடைக்கும்.