Sign In


முன்னொரு காலத்தில், இரண்டு நாரைகளும் ஒரு ஆமையும் காட்டின் உட்பகுதியிலிருந்த ஓர் ஏரியில் வசித்து வந்தன. ஆமை புத்திசாலி ஆனால் கூடவே அவசர குணமும், சலசல என பேசும் குணமும் கொண்டது. நாரைகள் இரண்டும் மிகவும் பொறுமைசாலிகள், எப்போதும் அடக்கமாக இருக்கும். அவர்கள் மூவரும் நல்ல நண்பர்களாக வளம் மிக்க அந்த நன்னீர் ஏரியில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தன.

ஆனால் அவர்கள் மகிழ்ச்சி நெடுநாள் நிலைக்கவில்லை. அவர்கள் வாழ்ந்து வந்த ஏரி “வானம் பார்த்த பூமி“ போல் மழையை மட்டுமே நம்பி இருந்தது. கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக அந்த பகுதியில் மழை குறைவாக இருந்ததால், ஏரியின் நீர்மட்டம் குறைந்தது. மேலும், புதிய நீர் வரவு இல்லாததால் தண்ணீர் கலங்கலாக குடிக்க முடியாமல் மாறியது. மீன்களும் எண்ணிக்கையில் குறைந்து உணவு பற்றாக்குறையும் ஏற்ப்பட்டது. அதனால் நாரைகள் இரண்டும் வேறு நீர்நிலை தேடிச் செல்ல முடிவு செய்தன.
ஆமையையும் தங்களுடன் அழைத்துச் செல்ல முடியாததை நினைத்து நாரைகள் வருந்தின. ஆனால் வாழ்வதற்கு வேறு வழி தெரியாத நிலையில் ஆமையை விட்டுப் பிரிய முடிவெடுத்தன.
“எல்லோரும் ஒருநாள் பிரியத்தான் வேண்டும்” என்று அழுத ஆமைக்கு ஆறுதல் கூறின நாரைகள். ஆமை யோசிக்க ஆரம்பித்தது.
நீண்ட நேர பலத்த யோசனைக்குப் பிறகு ஆமை தன் திட்டத்தை நாரைகளிடம் இவ்வாறு விவரித்தது.
“நீங்கள் இருவரும் மரக்குச்சியின் இரு முனைகளை அலகால் கொத்திக் கொள்ளுங்கள். நான் குச்சியின் நடுப் பகுதியை வாயால் பிடித்துக் கொள்கிறேன். நாம் மூவரும் பறந்து செல்லலாம்.”
நாரைகள் யோசனையில் ஆழ்ந்தன.
“நண்பனுக்கு உதவுவது உங்கள் கடமை” என்றது ஆமை.

“சரி, சேர்ந்தே செல்லலாம். ஆனால், எக்காரணத்தைக் கொண்டும் குச்சியிலிருந்து வாயை எடுக்காதே! அப்படி எடுத்தால் மரணம் நிச்சயம்” என்று எச்சரித்தன.
“திட்டம் போட்ட எனக்குத் தெரியாதா?” என்றது ஆமை.
நாரைகள் சென்று ஒரு திடமான குச்சியைக் கொண்டு வந்தன. மூவரும் புறப்படத் தயாராயின.

ஆமை குச்சியின் நடுப்பகுதியை வாயில் கவ்வியது. நாரைகள் குச்சியின் முனைகளை அலகால் கொத்தி பறக்க ஆரம்பித்தன.
குச்சியை நன்றாகப் பிடித்துக்கொள்” என்றன நாரைகள்.
குச்சியை இறுக்க பித்தது ஆமை.
காட்டைக் கடந்து பறந்து கொண்டிருந்தபோது மற்ற பறவைகள் இவர்கள் மூவரையும் சூழ்ந்து, “என்ன அதிசயமான காட்சி“ என்று வியந்தன.
“குச்சியைக் கவ்விக் கொண்டுப் பறப்பது எவ்வளவு புத்திசாலித்தனமானது!” என்று கூறியது பருந்து. பருந்தின் நண்பர்கள் எல்லோரும் ஆமோதித்தனர். அதைக் கேட்ட ஆமையால் பேசாமல் இருக்க முடியவில்லை. கீழே விழுந்து விடுவோம் என்று கஷ்டப்பட்டு அமைதியாக இருந்தது.
“உனக்காக இந்த திட்டத்தை தீட்டும் நல்ல நண்பர்கள் கிடைத்துள்ளார்கள், நீ அதிர்ஷ்டசாலி!” என்றது நீல நிறப் பறவை.
"ஆமாம், ஆமையே! நீ எவ்வளவு நன்றி கூறினாலும் பத்தாது” என்றது கிளி.
இப்போது ஆமையால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. திட்டம் முழுவதும் என்னுடையது. ஆனால் பாராட்டு நாரைகளுக்கா? என்று நினைத்தது ஆமை.
“பேசாதே!” என்று நாரைகள் இட வலமாக தலையை அசைத்தன.

அதைப் பொருட்படுத்தாமல் ஆமை கத்தியது “திட்டம்-”
பாவம் ஆமை உணரவில்லை அதுவே அதன் கடைசி சொல்லாக இருக்கும் என்று. தான் கூற வந்த “திட்டம் என்னுடையது. நாரைகள் அதை செயல்படுத்த மட்டுமே செய்தன” என்பதை சொல்ல முடியாமலே கீழே விழுந்தது.
நாரைகள் தம் நண்பனை நினைத்து மிகவும் வருந்தின.


முன்னொரு காலத்தில், இரண்டு நாரைகளும் ஒரு ஆமையும் காட்டின் உட்பகுதியிலிருந்த ஓர் ஏரியில் வசித்து வந்தன. ஆமை புத்திசாலி ஆனால் கூடவே அவசர குணமும், சலசல என பேசும் குணமும் கொண்டது. நாரைகள் இரண்டும் மிகவும் பொறுமைசாலிகள், எப்போதும் அடக்கமாக இருக்கும். அவர்கள் மூவரும் நல்ல நண்பர்களாக வளம் மிக்க அந்த நன்னீர் ஏரியில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தன.

ஆனால் அவர்கள் மகிழ்ச்சி நெடுநாள் நிலைக்கவில்லை. அவர்கள் வாழ்ந்து வந்த ஏரி “வானம் பார்த்த பூமி“ போல் மழையை மட்டுமே நம்பி இருந்தது. கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக அந்த பகுதியில் மழை குறைவாக இருந்ததால், ஏரியின் நீர்மட்டம் குறைந்தது. மேலும், புதிய நீர் வரவு இல்லாததால் தண்ணீர் கலங்கலாக குடிக்க முடியாமல் மாறியது. மீன்களும் எண்ணிக்கையில் குறைந்து உணவு பற்றாக்குறையும் ஏற்ப்பட்டது. அதனால் நாரைகள் இரண்டும் வேறு நீர்நிலை தேடிச் செல்ல முடிவு செய்தன.
ஆமையையும் தங்களுடன் அழைத்துச் செல்ல முடியாததை நினைத்து நாரைகள் வருந்தின. ஆனால் வாழ்வதற்கு வேறு வழி தெரியாத நிலையில் ஆமையை விட்டுப் பிரிய முடிவெடுத்தன.
“எல்லோரும் ஒருநாள் பிரியத்தான் வேண்டும்” என்று அழுத ஆமைக்கு ஆறுதல் கூறின நாரைகள். ஆமை யோசிக்க ஆரம்பித்தது.
நீண்ட நேர பலத்த யோசனைக்குப் பிறகு ஆமை தன் திட்டத்தை நாரைகளிடம் இவ்வாறு விவரித்தது.
“நீங்கள் இருவரும் மரக்குச்சியின் இரு முனைகளை அலகால் கொத்திக் கொள்ளுங்கள். நான் குச்சியின் நடுப் பகுதியை வாயால் பிடித்துக் கொள்கிறேன். நாம் மூவரும் பறந்து செல்லலாம்.”
நாரைகள் யோசனையில் ஆழ்ந்தன.
“நண்பனுக்கு உதவுவது உங்கள் கடமை” என்றது ஆமை.

“சரி, சேர்ந்தே செல்லலாம். ஆனால், எக்காரணத்தைக் கொண்டும் குச்சியிலிருந்து வாயை எடுக்காதே! அப்படி எடுத்தால் மரணம் நிச்சயம்” என்று எச்சரித்தன.
“திட்டம் போட்ட எனக்குத் தெரியாதா?” என்றது ஆமை.
நாரைகள் சென்று ஒரு திடமான குச்சியைக் கொண்டு வந்தன. மூவரும் புறப்படத் தயாராயின.

ஆமை குச்சியின் நடுப்பகுதியை வாயில் கவ்வியது. நாரைகள் குச்சியின் முனைகளை அலகால் கொத்தி பறக்க ஆரம்பித்தன.
குச்சியை நன்றாகப் பிடித்துக்கொள்” என்றன நாரைகள்.
குச்சியை இறுக்க பித்தது ஆமை.
காட்டைக் கடந்து பறந்து கொண்டிருந்தபோது மற்ற பறவைகள் இவர்கள் மூவரையும் சூழ்ந்து, “என்ன அதிசயமான காட்சி“ என்று வியந்தன.
“குச்சியைக் கவ்விக் கொண்டுப் பறப்பது எவ்வளவு புத்திசாலித்தனமானது!” என்று கூறியது பருந்து. பருந்தின் நண்பர்கள் எல்லோரும் ஆமோதித்தனர். அதைக் கேட்ட ஆமையால் பேசாமல் இருக்க முடியவில்லை. கீழே விழுந்து விடுவோம் என்று கஷ்டப்பட்டு அமைதியாக இருந்தது.
“உனக்காக இந்த திட்டத்தை தீட்டும் நல்ல நண்பர்கள் கிடைத்துள்ளார்கள், நீ அதிர்ஷ்டசாலி!” என்றது நீல நிறப் பறவை.
"ஆமாம், ஆமையே! நீ எவ்வளவு நன்றி கூறினாலும் பத்தாது” என்றது கிளி.
இப்போது ஆமையால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. திட்டம் முழுவதும் என்னுடையது. ஆனால் பாராட்டு நாரைகளுக்கா? என்று நினைத்தது ஆமை.
“பேசாதே!” என்று நாரைகள் இட வலமாக தலையை அசைத்தன.

அதைப் பொருட்படுத்தாமல் ஆமை கத்தியது “திட்டம்-”
பாவம் ஆமை உணரவில்லை அதுவே அதன் கடைசி சொல்லாக இருக்கும் என்று. தான் கூற வந்த “திட்டம் என்னுடையது. நாரைகள் அதை செயல்படுத்த மட்டுமே செய்தன” என்பதை சொல்ல முடியாமலே கீழே விழுந்தது.
நாரைகள் தம் நண்பனை நினைத்து மிகவும் வருந்தின.