Sign In
ஒரு கிராமத்தில் மாறன் என்ற மரவெட்டி தன் தாயுடன் ஒரு குடிசையில் வாழ்ந்து வந்தான். மாறன் தினமும் அதிகாலையில் எழுந்து மரம் வெட்ட அருகில் இருக்கும் காட்டுக்குச் செல்வான். மாலையில் சூரியன் மறையும் வரை மரங்களை வெட்டுவான். பிறகு தான் வெட்டிய மரங்களை கட்டாக கட்டி கிராமத்திற்குள் எடுத்து வருவான். அவன் எப்பொழுதும் நேர்மையான விலைக்கே தான் வெட்டிய மரங்களை விற்பான்.
அதில் கிடைக்கும் பணம் மாறனுக்கும் அவன் அம்மாவுக்கும் மூன்று வேளை உணவுக்கு மட்டுமே போதுமானதாக இருந்தது. அவர்கள் பெரிதாக பணம் எதுவும் சேர்த்து வைக்கவில்லை. ஒரு நாள் மாறன் மரம் வெட்ட செல்லவில்லை என்றால் சாப்பாட்டிற்க்கே கஷ்டம்.
அன்றும் வழக்கம்போல் மாறன் மரம் வெட்ட காட்டுக்கு சென்றான். அவன் ஆற்றின் அருகிலிருந்த ஒரு பெரிய மரத்தைப் பார்த்தான். பெரிய மரத்தின் கட்டைகள் நல்ல விலைக்கு போகும் என்பதால் அவன் அந்த மரத்தை வெட்ட முடிவு செய்தான்.
முதலில் மரத்தின் கிளைகளை வெட்ட எண்ணி மரத்தின் மேலேறி ஒரு பெரிய கிளையில் அமர்ந்து வெட்ட ஆரம்பித்தான். ஓங்கி வெட்டும்போது கோடாரி கை நழுவி ஆற்றுக்குள் விழுந்தது.
மரத்திலிருந்து இறங்கி வந்து ஆற்றின் உள்ளே எட்டிப் பார்த்தான். அவனது கோடாரி கண்ணுக்கு தெரியவில்லை. ஆறு மிகவும் ஆழமானது என்பதை உணர்ந்தான். அவனுக்கு நீச்சல் தெரியாது. சுற்றிலும் தேடிப் பார்த்தான் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் யாரும் இல்லை.
“யாராவது இருக்கிறீர்களா” என்று கத்தினான். அவனது ஒலியே எதிரொலியாக திரும்பி வந்தது.
“இன்று கோடாலியை எடுக்க முடியாமல் போனால் நாளை சாப்பாட்டுக்கு என்ன செய்வது?”
“நாளை ஆட்களைக் கூட்டி வந்து தேடியும் கிடைக்காமல் போனால்?”
“அய்யோ! கோடாரி இல்லாமல் வேலை செய்ய முடியாது. புதிய கோடாரி வாங்கும் அளவுக்கு பணமும் இல்லை. கடவுளே!”
இவ்வாறு பலவிதமான விடை தெரியா கேள்விகள் அவனுக்குள்ளே. யோசித்து யோசித்து சோர்ந்து போனான்.
நேரம் ஆக ஆக மாறனுக்கு பயம் வந்தது. செய்வது அறியாது அழ ஆரம்பித்தான். அவனது அழுகுரல் கேட்டு தேவதை ஒன்று ஆற்றில் தோன்றியது.
தன்னை வன தேவதை என்று அறிமுகப்படுத்திக் கொண்டது தேவதை.
“மகனே! நீ யார்? எதற்காக யாரும் இல்லாத இந்தக் காட்டுக்குள் வந்து அழுது கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டது வன தேவதை.
“தாயே! என் பெயர் மாறன். நான் ஒரு மரவெட்டி. இன்று மரத்தை வெட்டும்போது கோடாரி கைதவறி ஆற்றுக்குள் விழுந்து விட்டது. எனக்கு நீச்சல் தெரியாததால் கோடாரியை ஆற்றுக்குள் இறங்கி எடுக்க முடியவில்லை. நானும் என் தாயும் அதை வைத்துதான் மரம்வெட்டி பிழைத்து கொண்டிருக்கிறோம்” என்று அழுதுகொண்டே கூறினான் மரவெட்டி.
அதைக் கேட்ட வன தேவதை “கவலைப்படாதே மகனே! நான் ஆற்றுக்குள் சென்று தேடிப்பார்க்கிறேன்” என்றது.
அதைக் கேட்டு சற்று ஆறுதல் அடைந்தான் மரவெட்டி மாறன். வன தேவதை அவனை சோதிக்க நினைத்தது.
வன தேவதை ஆற்றுக்குள் மூழ்கி சிறிது நேரம் கழித்து கையில் ஒரு வெள்ளிக் கோடாரியுடன் வெளியில் வந்தது.
“வாங்கிக்கொள் உன் கோடாரியை“ என்று கோடாரியை நீட்டியது வன தேவதை.
“தாயே! இந்தக் கோடாரி என்னுடையது இல்லை” என்றான் மாறன்.
அவனது நேர்மையான பதிலைக் கேட்டு ஆச்சரியமடைந்தது தேவதை. அவனை மேலும் சோதிக்க நினைத்தது.
“சரி நீ கவலைப்படாதே! நான் மீண்டும் சென்று தேடிப்பார்க்கிறேன்.” என்றது வன தேவதை.
வன தேவதை மீண்டும் ஆற்றுக்குள் மூழ்கி சிறிது நேரம் கழித்து கையில் ஒரு தங்கக் கோடாரியுடன் வெளியில் வந்தது.
“இது கண்டிப்பாக உன் கோடாரியாகத்தான் இருக்கும்” என்று கோடாரியை நீட்டியது வன தேவதை.
“தாயே! இந்தக் கோடாரியும் என்னுடையது இல்லை” என்றான் மாறன்.
அவனது நேர்மையான பதிலைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தது தேவதை. இந்த முறை எதுவும் பேசாமல் நீரில் மூழ்கிய மாறனின் இரும்புக் கோடாரியை எடுத்து வந்தது வன தேவதை.
அதைப் பார்த்ததும் மகிழ்ச்சியில் குதித்தான் மாறன்.
வன தேவதை அவனது நேர்மையைப் பாராட்டி தங்கம், வெள்ளி, இரும்பு ஆகிய மூன்று கோடாரிகளையும் பரிசளித்தது.
மாறன் தேவதைக்கு நன்றி கூறிவிட்டு மகிழ்வுடன் வீடு திரும்பினான்.
நீதி: வாய்மையே வெல்லும்.
ஒரு கிராமத்தில் மாறன் என்ற மரவெட்டி தன் தாயுடன் ஒரு குடிசையில் வாழ்ந்து வந்தான். மாறன் தினமும் அதிகாலையில் எழுந்து மரம் வெட்ட அருகில் இருக்கும் காட்டுக்குச் செல்வான். மாலையில் சூரியன் மறையும் வரை மரங்களை வெட்டுவான். பிறகு தான் வெட்டிய மரங்களை கட்டாக கட்டி கிராமத்திற்குள் எடுத்து வருவான். அவன் எப்பொழுதும் நேர்மையான விலைக்கே தான் வெட்டிய மரங்களை விற்பான்.
அதில் கிடைக்கும் பணம் மாறனுக்கும் அவன் அம்மாவுக்கும் மூன்று வேளை உணவுக்கு மட்டுமே போதுமானதாக இருந்தது. அவர்கள் பெரிதாக பணம் எதுவும் சேர்த்து வைக்கவில்லை. ஒரு நாள் மாறன் மரம் வெட்ட செல்லவில்லை என்றால் சாப்பாட்டிற்க்கே கஷ்டம்.
அன்றும் வழக்கம்போல் மாறன் மரம் வெட்ட காட்டுக்கு சென்றான். அவன் ஆற்றின் அருகிலிருந்த ஒரு பெரிய மரத்தைப் பார்த்தான். பெரிய மரத்தின் கட்டைகள் நல்ல விலைக்கு போகும் என்பதால் அவன் அந்த மரத்தை வெட்ட முடிவு செய்தான்.
முதலில் மரத்தின் கிளைகளை வெட்ட எண்ணி மரத்தின் மேலேறி ஒரு பெரிய கிளையில் அமர்ந்து வெட்ட ஆரம்பித்தான். ஓங்கி வெட்டும்போது கோடாரி கை நழுவி ஆற்றுக்குள் விழுந்தது.
மரத்திலிருந்து இறங்கி வந்து ஆற்றின் உள்ளே எட்டிப் பார்த்தான். அவனது கோடாரி கண்ணுக்கு தெரியவில்லை. ஆறு மிகவும் ஆழமானது என்பதை உணர்ந்தான். அவனுக்கு நீச்சல் தெரியாது. சுற்றிலும் தேடிப் பார்த்தான் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் யாரும் இல்லை.
“யாராவது இருக்கிறீர்களா” என்று கத்தினான். அவனது ஒலியே எதிரொலியாக திரும்பி வந்தது.
“இன்று கோடாலியை எடுக்க முடியாமல் போனால் நாளை சாப்பாட்டுக்கு என்ன செய்வது?”
“நாளை ஆட்களைக் கூட்டி வந்து தேடியும் கிடைக்காமல் போனால்?”
“அய்யோ! கோடாரி இல்லாமல் வேலை செய்ய முடியாது. புதிய கோடாரி வாங்கும் அளவுக்கு பணமும் இல்லை. கடவுளே!”
இவ்வாறு பலவிதமான விடை தெரியா கேள்விகள் அவனுக்குள்ளே. யோசித்து யோசித்து சோர்ந்து போனான்.
நேரம் ஆக ஆக மாறனுக்கு பயம் வந்தது. செய்வது அறியாது அழ ஆரம்பித்தான். அவனது அழுகுரல் கேட்டு தேவதை ஒன்று ஆற்றில் தோன்றியது.
தன்னை வன தேவதை என்று அறிமுகப்படுத்திக் கொண்டது தேவதை.
“மகனே! நீ யார்? எதற்காக யாரும் இல்லாத இந்தக் காட்டுக்குள் வந்து அழுது கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டது வன தேவதை.
“தாயே! என் பெயர் மாறன். நான் ஒரு மரவெட்டி. இன்று மரத்தை வெட்டும்போது கோடாரி கைதவறி ஆற்றுக்குள் விழுந்து விட்டது. எனக்கு நீச்சல் தெரியாததால் கோடாரியை ஆற்றுக்குள் இறங்கி எடுக்க முடியவில்லை. நானும் என் தாயும் அதை வைத்துதான் மரம்வெட்டி பிழைத்து கொண்டிருக்கிறோம்” என்று அழுதுகொண்டே கூறினான் மரவெட்டி.
அதைக் கேட்ட வன தேவதை “கவலைப்படாதே மகனே! நான் ஆற்றுக்குள் சென்று தேடிப்பார்க்கிறேன்” என்றது.
அதைக் கேட்டு சற்று ஆறுதல் அடைந்தான் மரவெட்டி மாறன். வன தேவதை அவனை சோதிக்க நினைத்தது.
வன தேவதை ஆற்றுக்குள் மூழ்கி சிறிது நேரம் கழித்து கையில் ஒரு வெள்ளிக் கோடாரியுடன் வெளியில் வந்தது.
“வாங்கிக்கொள் உன் கோடாரியை“ என்று கோடாரியை நீட்டியது வன தேவதை.
“தாயே! இந்தக் கோடாரி என்னுடையது இல்லை” என்றான் மாறன்.
அவனது நேர்மையான பதிலைக் கேட்டு ஆச்சரியமடைந்தது தேவதை. அவனை மேலும் சோதிக்க நினைத்தது.
“சரி நீ கவலைப்படாதே! நான் மீண்டும் சென்று தேடிப்பார்க்கிறேன்.” என்றது வன தேவதை.
வன தேவதை மீண்டும் ஆற்றுக்குள் மூழ்கி சிறிது நேரம் கழித்து கையில் ஒரு தங்கக் கோடாரியுடன் வெளியில் வந்தது.
“இது கண்டிப்பாக உன் கோடாரியாகத்தான் இருக்கும்” என்று கோடாரியை நீட்டியது வன தேவதை.
“தாயே! இந்தக் கோடாரியும் என்னுடையது இல்லை” என்றான் மாறன்.
அவனது நேர்மையான பதிலைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தது தேவதை. இந்த முறை எதுவும் பேசாமல் நீரில் மூழ்கிய மாறனின் இரும்புக் கோடாரியை எடுத்து வந்தது வன தேவதை.
அதைப் பார்த்ததும் மகிழ்ச்சியில் குதித்தான் மாறன்.
வன தேவதை அவனது நேர்மையைப் பாராட்டி தங்கம், வெள்ளி, இரும்பு ஆகிய மூன்று கோடாரிகளையும் பரிசளித்தது.
மாறன் தேவதைக்கு நன்றி கூறிவிட்டு மகிழ்வுடன் வீடு திரும்பினான்.
நீதி: வாய்மையே வெல்லும்.